மோசடியான வகையில் VAT வரி வசூல்

Date:

VATக்கு பதிவு செய்யாமல் VAT வசூலிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து உள்நாட்டு வருவாய்த் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அதன்படி 24.01.2024 அன்று கொழும்பு நகர எல்லையில் இயங்கும் நிறுவனமொன்று VAT இல் பதிவு செய்யப்படாத மற்றும் VAT அறவிடப்படுவது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அலுவலக வளாகத்திற்குள் நுழைய யாரும் அனுமதிக்கப்படாமல், இருந்த நிலையில் அங்கு பொலீஸார் சென்று பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்து, விசாரணை நடத்தி, உரிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய கணினிப் பிரிவைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் தகவல்களின் சரியான தன்மையை கண்டறியவும், சரியான வரி செலுத்தப்பட்டுள்ளதா என விசாரிக்கவும் தணிக்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...