Thursday, May 2, 2024

Latest Posts

அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசும் எதிர்க்கட்சி எம்பி ராஜித

அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது போல் தோன்றும் சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அடுத்த மாதம் இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வந்த ஒரு நாடாக IMF அறிவிக்கும் என்று கூறினார்.

வார இறுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன பேசுகையில், குறுகிய காலத்திற்குள் வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறிய நாடாக இலங்கை மாறும் எனத் தெரிவித்தார்.

“கிரீஸ் மக்கள் திவால் நிலைக்குச் சென்ற பிறகு நான்கு அரசாங்கங்களைக் கவிழ்த்தனர். திவால் நிலையிலிருந்து வெளிவர பத்து வருடங்கள் ஆனது. அர்ஜென்டினா மற்றும் லெபனான் ஆகியனவும் அப்படியே. இருப்பினும், நமது நாடு திவால் நிலையிலிருந்து மிகக் குறுகிய காலத்திற்குள் வெளிவரும் நாடாக மாற உள்ளது. ஐ.எம்.எஃப். அடுத்த மாதம் மீண்டு வந்த பொருளாதாரம் கொண்ட நாடாக இலங்கையை அறிவிக்க வாய்ப்புள்ளது” என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எனினும் கடந்த வாரம் ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இவர் வாக்களித்தார்.

SJB தலைவர் அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை விமர்சித்ததாகவும், அவர் தலைமையிலான எதிர்கால அரசாங்கம் IMF உடன் புதிய உடன்படிக்கைக்கு செல்லும் என்று சமீபத்தில் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.