பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

Date:

வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான ஹினா ரப்பானி கர் இன்று (பிப்ரவரி 03) இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச் கூறுகையில், இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் கௌரவ விருந்தினராக அமைச்சர் பங்கேற்பார்.

சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன், அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியையும் சந்திக்கவுள்ளதாக அவர தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியான உறவுகளை பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ளதாகத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர், இராஜாங்க அமைச்சரின் விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வுகளை மேம்படுத்துவதற்கும் இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு பாகிஸ்தானின் ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...