ரஞ்சனின் விடுதலையில் சந்தேகம்

Date:

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (04) ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம், பிரதான இடைத்தரகராக செயற்பட்ட வர்த்தகர் நிஸ்ஸங்க சேனாதிபதி தற்போது கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றமையே ஆகும்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை நினைவுகூரும் வகையில், ரஞ்சன் ராமநாயக்கவின் நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களால் பாரியளவிலான விளம்பரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்ட போதிலும் பெப்ரவரி 04ஆம் திகதி அது நடைபெறாது என இடைத்தரகர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு வழங்கப்படுவாரா இல்லையா என்பது இன்னும் சில மணித்தியாலங்களில் தெரியவரும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....