ஜனாதிபதி – சட்டமா அதிபர் இடையில் சந்திப்பு

0
61

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளமை சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அந்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்திப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமா அதிபரின் பரிந்துரையில் அரசாங்கத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்தப் பரிந்துரை ஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், சட்டமா அதிபரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் இன்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here