தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

Date:

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 

ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 470 படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது. 

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர். 

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் போஸ் என்பவருக்குச் சொந்தமான முதல் படகில் ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினர் இருந்தனர்.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எஸ்.சுதன் என்பவருக்குச் சொந்தமான இரண்டாவது படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் இருந்தனர். அதோடு மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேல் விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதனிடையே மீனவர் கைது செய்யப்பட்டதற்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.(தினமணி )

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...