இலங்கையில் முதல் முறையாக Hyundai கார் உற்பத்தி!

Date:

இலங்கையில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட செய்யப்பட்ட Hyundai Grand i10, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சிட்டி சென்டரில் இன்று (10) முதல் முறையாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ நிறுவனம் மற்றும் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இணைந்து சீதுவாவில் உள்ள அதிநவீன தொழிற்சாலையில் இந்த காரின் அசெம்பிளிங் செய்யப்படுகிறது.

வாகனங்களை ஒன்று சேர்ப்பது மற்றும் வாகன உதிரிபாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் துறையில் இந்த நிகழ்வு ஒரு பாரிய படியாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த காரை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், முதலீட்டு சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, அபான்ஸ் குழும நிறுவனங்களின் பணிப்பாளர்கள் சரோஷி துபாஷ் மற்றும் ருசி பெஸ்டோன்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில்...

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...