இந்திய விஜயத்தில் நடந்தது என்ன.. விஜித்த ஹேரத் கூறும் விளக்கம்

0
71

இன்று உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின்படி தமது கட்சியும் மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர், ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரச்சார செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் கருத்துப்படி தெரியவருகிறது.

தேசிய மக்கள் சக்தி குழுவொன்றின் இந்திய விஜயம் தொடர்பான உண்மைகளை விளக்குவதற்காக பெலவத்வத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாகவும், பத்து நாட்களுக்கு விஜயம் மேற்கொள்வதாக முன்மொழியப்பட்ட போதிலும், அது ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுப்பயணத்தின் அனைத்து கூட்டங்கள் மற்றும் கண்காணிப்பு நிலையங்களின் பணிகள் இந்திய அரசால் திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு கொள்வனவு செயல்முறையையோ அல்லது டெண்டர் நடைமுறையையோ பின்பற்றவில்லை எனவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் உடன்படவில்லை எனவும், தெளிவான கொள்முதலின் கீழ் டெண்டர் நடைமுறையை பின்பற்றுவதாகவும் அவர் இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here