18 சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பிலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியுள்ளது.
தமது சங்கம் தற்காலிகமாக இந்த போராட்டத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப் பகிஷ்கரிப்பை கைவிடுமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த 10ம் திகதி இரண்டு இடைகால தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவிற்கு தலைசாய்த்து இந்த முடிவை எடுத்ததாக சமன் ரத்னப்பிரிய கூறியுள்ளார்.
மேலும், நோயாளர் பராமரிப்பு சேவையை அத்தியாவசியமாக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.