அலி சப்ரி ரஹீம் பயணித்த சொகுசு ஜீப் விபத்து

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த சொகுசு ஜீப் இன்று (13) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 01.00 மணியளவில் புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 15 ஆம் மைல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் உழவு இயந்திரத்தை செலுத்திய நபர் காயமடைந்துள்ளார்.

புளியங்குளம், அளுத்கம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினரின் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக 2022 ஆம் ஆண்டில், இந்த எம்.பி பயணித்த கார் மோதியதில் ஒருவர் இறந்தார். இது பாலாவியா – கல்பிட்டி வீதியில் மாம்புரியா பகுதியில் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...