அலி சப்ரி ரஹீம் பயணித்த சொகுசு ஜீப் விபத்து

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த சொகுசு ஜீப் இன்று (13) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 01.00 மணியளவில் புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 15 ஆம் மைல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் உழவு இயந்திரத்தை செலுத்திய நபர் காயமடைந்துள்ளார்.

புளியங்குளம், அளுத்கம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினரின் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக 2022 ஆம் ஆண்டில், இந்த எம்.பி பயணித்த கார் மோதியதில் ஒருவர் இறந்தார். இது பாலாவியா – கல்பிட்டி வீதியில் மாம்புரியா பகுதியில் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...