மட்டக்களப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள்

Date:

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான சிவனேசத்துறை சந்திரகாந்தன், வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் அத்தாவுல்லா, அலிசாஹிர் மௌலானா போன்றவர்களின் பங்கேற்புடன் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றது.

இதன் போது பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் தனியார் கல்வி நிறுவனங்களால் நடாத்தப்படும் மேலதிக வகுப்புகளில் தரம் 10 தொடக்கம் க.பொ.த உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து வகுப்புகளையும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடை செய்வது தொடர்பான விசேட கூட்டம் ஒன்றை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டத்தில் சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் மதுவிற்பனை தொடர்பாக கலால் திணைக்களம், பொலிசாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.

விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கான இழப்பீடுகளை மீள்பரிசீலனை செய்து அதற்கான இழப்பீட்டுத் தொகையினை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கவும், பொதுமக்கள் மின்சாரக்கட்டணம் செலுத்த தாமதமாவதால் ஏற்படும் மின் துண்டிப்புச் சலுகைக் காலத்தினை நீடிப்பது தொடர்பாக மின்சக்தி எரிசக்தி அமைச்சருக்கு கோரிக்கை விடுப்பதெனவும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் பிரதேச மட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...