தாதியர்கள் கொடுப்பனவு கோரி ஆர்ப்பாட்டம்

Date:

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனங்களை தங்களுக்கும் வழங்குமாறு கோரி அகில இலங்கை தாதியர் சங்கம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

தமது கோரிக்கைக்கு அரசாங்கம் உடனடியாக செவி சாய்க்க வேண்டுமென தாதியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

72 சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(14) தொடர்கின்றது.

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று(13) காலை 6.30 முதல் முதல் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் அண்மையில் கலந்துரையாடப்பட்ட போதிலும் அது தோல்வியில் முடிவடைந்ததாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள், இரசாயன ஆய்வுகூட நிபுணர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தநிலையில், வைத்தியசாலை சேவைகளில் இராணுவம் மற்றும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...