கிண்ணியா உப்பாறில் படகு கவிழ்ந்து இருவர் பலி

Date:

மகாவலி ஆறு கடலில் விழும் கிண்ணியா உப்பாறு களப்பில் இருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்த நிலையில் இன்று (14) சடலங்களாக மிட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா, பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த உதய் ரூபன் மற்றும் திருகோணமலை வாழையூட்டைச் சேர்ந்த புஷ்பா ராசா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு ஈச்சந்தீவு பகுதியில் இருந்து உப்பாறு பகுதிக்கு படகில் சென்றவர்களை காணவில்லை என்று கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் உயிரிழந்த இருவரையும் தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எச்.சி.கே.பெர்ணான்டோவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த இரண்டு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...