தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இடைக்கால தடை

Date:

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது.

இந்த மனு இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது வாதத்தை அவதானித்த நீதவான் நீதிமன்றம் மாநாட்டை நடத்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக கூட்டங்கள் நடைபெற்று, அதன் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தக் கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வகையில் இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

https://chat.whatsapp.com/CPupITWiKsdCNa72HK58Ny

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...