கடவுச்சீட்டு அலுவலக ஊழியர் மற்றும் 03 பேர் இலஞ்சம் பெற்றதாக கைது!

Date:

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற நான்கு நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் பெண்,, லொத்தர் வியாபாரி மற்றும் மொபைல் சிம் கார்ட் விற்பனையாளர் ஆகியோர் அடங்குவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் ஆன்லைன் சந்திப்பைப் பெறாமல் ஒரு நாள் சேவையின் கீழ் பாஸ்போர்ட் வழங்க ரூ.22,000 லஞ்சம் வாங்கியுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவரான கட்டிட திணைக்கள அதிகாரி ஒருவர் பத்தரமுல்லையில் உள்ள வங்கிக் கிளையொன்றிற்கு முன்பாக 22,000 ரூபா இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் திணைக்கள அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய இரு சந்தேக நபர்களும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...