மாத்தளை வருடாந்த மகோற்சவம் ; விசேட பாதுகாப்பை வழங்குவது குறித்து கலந்துரையாடல்

Date:

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவத்தின் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னகோனுக்கும் மேற்படி தேவஸ்தான அறங்காவலர் சபை தலைவர் பி தருவானந்தா தலைமையிலான ஏற்பாடு குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சருக்கும் தேவஸ்தான அறங்காவலர் சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இம்முறை நடைபெற உள்ள மஹோற்சவத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என ஏற்பாட்டுக் குழுவினரால் எதிர்பார்க்கப்படுவதால் எவ்வித தடைகளும் இன்றி பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பிலும் விசேட பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

விஷேடமாக இராணுவம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சருடன் மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன கமகே எட்டாவது கஜபா படையணியின் கேர்ணல் சில்வா உட்பட கோவில் அறங்காவலர் சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...