இலங்கையர்கள் 42 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை

Date:

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 குற்றவாளிகளை கைது செய்ய 42 சிவப்பு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இந்த 42 பேரையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டுபாய் மாநிலத்தில் இருந்து நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பலத்த போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான குடு சலிந்துவின் பிரதான சிஷ்யனான பியூமாவிடம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல ஆபத்தான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள ஹரக் கட்டாவினை தப்பிச் செல்ல உதவிய தற்போது தலைமறைவாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தரும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...