இலங்கையர்கள் 42 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை

Date:

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 குற்றவாளிகளை கைது செய்ய 42 சிவப்பு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இந்த 42 பேரையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டுபாய் மாநிலத்தில் இருந்து நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பலத்த போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான குடு சலிந்துவின் பிரதான சிஷ்யனான பியூமாவிடம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல ஆபத்தான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள ஹரக் கட்டாவினை தப்பிச் செல்ல உதவிய தற்போது தலைமறைவாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தரும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...