இலங்கையர்கள் 42 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை

Date:

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 குற்றவாளிகளை கைது செய்ய 42 சிவப்பு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இந்த 42 பேரையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டுபாய் மாநிலத்தில் இருந்து நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பலத்த போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான குடு சலிந்துவின் பிரதான சிஷ்யனான பியூமாவிடம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல ஆபத்தான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள ஹரக் கட்டாவினை தப்பிச் செல்ல உதவிய தற்போது தலைமறைவாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தரும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம்

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம் ஆரம்பித்து...

இந்திய துணை ஜனாதிபதி பதவி பிரமாண நிகழ்வில் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச பொது சேவை குழு (PSI) கூட்டத்தில் கலந்துகொள்ள...