குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் நாட்டில் வரும்

Date:

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருவதுடன், அதற்கான முன்மொழிவுகள் நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

விலை உயர்வு இல்லாமல் நிறுவனத்தை நடத்த முடியாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறுகிறது.

எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும் விலை உயர்வு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இந்நிலைமை காரணமாக விலை அதிகரிக்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்படியானால், மின் உற்பத்தி நிலையங்கள், ரயில்கள், பயணிகள் பேருந்துகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.

சாதாரண நாட்டு மக்களின் அன்றாடத் தேவைக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...