சமாதான நீதவான் நியமன தகுதி குறைப்பு

Date:

சமாதான நீதிவான் நியமனத்திற்கு தேவையான கல்வித் தகுதி உயர் தர மட்டத்திலிருந்து சாதாரண தர மட்டத்திற்கு குறைக்க நீதிமன்றங்கள், சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டு, சமாதான நீதவான் நியமனத்தைப் பெறுவதற்கு கல்வித் தகைமைகளாக 03 உயர்தரப் பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தார்.

அதனை மீளப் பரிசீலனை செய்து, 2024 பெப்ரவரி 13ஆம் திகதி, அவர் ஒரு விசேட வர்த்தமானியை வெளியிட்டார், மேலும் சமாதான நீதவானாக நியமனம் பெறுவதற்கு கல்வித் தகைமையாக, சாதாரண தரத்தில் இரண்டு தடவைக்கு கூடாமல் 06 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும், அதில் 02 பாடங்களில் சிறப்பு சித்தி பெற்றிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், அந்தத் தகுதி இல்லாவிட்டாலும், முன்னுதாரணமான சேவையைச் செய்திருந்தாலும், ஒரு புகழ்பெற்ற மதத் தலைவர் அல்லது சமூகத் தலைவர் சமாதான நீதிவானாக நியமிக்கத் தகுந்த ஒருவரைப் பரிந்துரைத்தால், நீதியமைச்சர் அவரை சமாதான நீதிவான் ஆக்க முடியும் என விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...