2 கோடி லஞ்சம் பெற்ற அரச ஊழியர் கைது

Date:

ரூபாய் 2 கோடிக்கு மேற்பட்ட தொகையை லஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சுகாதார அமைச்சின் ஓய்வு பெற்ற பிரதான எழுத்தர் ஒருவரை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.

அவர் சுகாதார அமைச்சின் உணவகத்தில் இருந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு, ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட பின்னர், அதற்கான வாடகைத் தொகையை அமைச்சு செலுத்தும் போது சம்பந்தப்பட்ட செக்குகளை தாமதமின்றி வழங்குவதற்காக, சந்தேகநபர் இவ்வாறு லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற பிரதான எழுத்தர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர் இம்மாதம் 17 ஆம் தேதி வரை விளக்கமறியலில் (ரிமாண்ட்) வைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...