மொட்டு கட்சிக்கு சவால் விடுக்கும் கூட்டத்திற்கு சஜித் அணி தயார்

Date:

எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அனுராதபுரம் சல்காடு மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது.

பேரணியை ஒழுங்கமைப்பதற்காக வழிநடத்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, தவிசாளர் சரத் பொன்சேகா, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுன நடத்திய சல்காடு பேரணிக்கு சவாலாக இதே மைதானத்தில் மேலும் வெற்றிகரமான பேரணியை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இந்த பேரணியுடன் இணைந்து கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்தும் விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச செயற்குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...