ஈரான் வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Date:

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்துள்ளார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் உட்பட 20 பேர் கொண்ட தூதுக்குழுவினர் நேற்று (19) இரவு நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து அந்நாட்டு அரசாங்கத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நாட்டுக்கு வந்த குழுவினரை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நாடு வந்த ஈரான் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க உள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...