நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் ஆட்சேபனை

Date:

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க கோரி சட்டமா அதிபர் நேற்று (20) உச்ச நீதிமன்றில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதை ஆட்சேபித்து நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த 16 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...

சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட அதிரடி சட்டம்

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்...

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்...