ஜனாதிபதி தேர்தலுக்கு பணம் செலவழிப்பது அநியாயம் – ராஜித

Date:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு கோடிக்கணக்கான பணத்தை விரயம் செய்வது அநியாயம் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உணவளிக்கக் கூட முடியாத நிலையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கக் கூடாது எனத் தெரிவித்த அவர், நாட்டின் நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலில் அரசியல் ஆதாயங்களைப் பற்றி சிந்திக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், நாட்டில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்காக ஒன்றிணைய வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று நாட்டில் அவ்வாறானதொரு சூழல் காணப்படுவதாகவும் எனவே பிரித்து விமர்சிப்பதை விட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மக்களுக்காக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை யாராலும் கட்டியெழுப்ப முடியாது என்றும், நெருக்கடியிலிருந்து நாடு விடுபட்ட பின்னர் கட்சிகளாக பிரிந்து அரசியல் செய்யலாம் என்றும் கூறினார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை வழிபட்டு வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...