நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் ஆட்சேபனை

Date:

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க கோரி சட்டமா அதிபர் நேற்று (20) உச்ச நீதிமன்றில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதை ஆட்சேபித்து நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த 16 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...