கொள்கை இல்லாத அரசாங்கம் – அமைச்சர் வாசு விலாசல்

Date:

பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்துவது தீர்வாகாது எனவும் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லாததே பிரச்சினை எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“பொருட்களின் விலை இன்று வாங்கும் விலை அல்ல, நாளை. இந்தக் கடையில் உள்ள விலை அல்ல, மற்ற கடையில். இதன் பொருள் என்ன? எனவே விலையை கட்டுப்படுத்த முடியாது என்பதே பதில். கட்டுப்பாட்டு விலைகள் விலைகளை கட்டுப்படுத்தாது. இந்த அத்தியாவசியப் பொருட்களை, நியாயமான விலையில், அரசுக்கு நஷ்டத்தில் விநியோகிக்க, அரசு தனக்கான சந்தைகளை உருவாக்க வேண்டும். முன்னாள் கூட்டுறவு வலையமைப்பை ஏன் அரசாங்கத்தால் புதுப்பிக்க முடியாது? அரசுக்கு கொள்கை இல்லை! கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் செயல்படுத்துவதே சௌபாக்கிய நோக்கம். ஆனால் அரசாங்கம் வியாபாரிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளது” என்றார்.

கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...