தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து விசாரணை செய்ய விசேட மருத்துவ குழு

Date:

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபையொன்று அடுத்த வாரம் நியமிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இன்று (22) அறிவித்தார்.

ஐவர் கொண்ட இந்த விசேட வைத்திய சபைக்கான விசேட வைத்தியர்களின் பட்டியல் சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்தார்.

இதன்படி, மூப்பு அடிப்படையில் இந்த நிபுணர் மருத்துவ குழு அடுத்த வாரம் நியமிக்கப்படும் என நீதவான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (22) நீதிமன்றில் மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...