ஷானியின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Date:

இரகசிய பொலிஸ் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகரவிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஷானி அபேசேகர தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகர, தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லையெனத் தெரிவித்து தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய ஆஜராகியிருந்தார். சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ரொஹந்த அபேசூரிய ஆஜராகியிருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...