ஷானியின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Date:

இரகசிய பொலிஸ் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகரவிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஷானி அபேசேகர தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகர, தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லையெனத் தெரிவித்து தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய ஆஜராகியிருந்தார். சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ரொஹந்த அபேசூரிய ஆஜராகியிருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...