Saturday, May 18, 2024

Latest Posts

யாழ். பல்கலைக்கழகத்தில் தாய்மொழி தின நிகழ்வுகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(21) காலை பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மொழியல் ஆங்கிலத்துறை தலைவர் கவிதா நவகுலன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது “தாய்மொழி பற்றிய கருத்தியல்” எனும் தலைப்பில் சிக்காக்கோ பல்கலைக்கழக பேராசிரியர் இ. அண்ணாமலை நிகழ்நிலையில் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.