தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக முடிவு செய்யவில்லை!

Date:

தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் சட்ட ரீதியாக தீர்மானிக்கவில்லை எனவும் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை, ஒத்திவைக்க எந்த தேர்தலும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று (பிப்ரவரி 23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கே முன்னுரிமை அளிக்கிறேன். பொருளாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்காவிடின் நாடு எஞ்சியிருக்காது.

நாட்டைப் பாதுகாத்தால் மாத்திரமே அரசியலமைப்பின் ஏற்பாடுகளை உறுதிப்படுத்த முடியும். தேசம் இல்லாமல் அரசியலமைப்பை பாதுகாக்க முடியாது. ஜனாதிபதியின் முதல் கடமை தேசத்தைப் பாதுகாப்பதும், பின்னர் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் ஆகும்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு அமைய புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டு வாரங்களுக்குள் சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...