Saturday, May 4, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சுருக்கம் 23.02.2023

1.சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன், சீனாவின் நிதி உத்தரவாதத்துக்கு முன்னர் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், சீனாவின் நிதி உத்தரவாதத்துக்காக காத்திருப்பதே இந்த வசதியை வழங்குவதற்கான மிகச் சரியான வழி என்றும் கூறினார்.

2.சமீபத்தில் விதிக்கப்பட்ட வரிகள் இருந்தபோதிலும் 2023 ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூ.2.4 டிரில்லியன் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை பதிவு செய்யும் என பட்டய கணக்காளர்களின் வரிவிதிப்பு பீடத்தின் தலைவர் திஷான் சுபசிங்க கூறுகிறார்: அதிகரித்து வரும் வட்டி செலவினாலேயே இத்தகைய பற்றாக்குறை ஏற்படும் என விளக்குகிறார் : மேலும் அதிக விகிதத்தில் பணம் அச்சிடப்படுவதாகவும் கூறுகிறார். மற்றும் குறைந்தபட்சம் ரூ.1.3 டிரில்லியன் வட்டி செலுத்துதலுடன் சேர்க்கப்படும்.

3.ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மை குறித்து சிந்தித்து வாக்களிக்கும் சர்வஜன வாக்கெடுப்பாகக் கருதுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

4.எதிர்வரும் வாரத்தில் இந்தியாவில் இருந்து 02 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமில இத்தமல்கொட தெரிவிக்கின்றார் – நாளாந்த முட்டை தேவை 5.5 மில்லியனாக இருந்தாலும், 05 மில்லியன் முட்டைகளே உற்பத்தி செய்யப்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்.எம். சரத் ​​அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

5.2022 டிசம்பரில் நடத்தப்பட்ட உலக உணவுத் திட்டத்தின் வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வில், இலங்கையில் உள்ள ஒவ்வொரு 3 குடும்பங்களில் ஒருவர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் – ஒவ்வொரு 10 குடும்பங்களில் 07 குடும்பங்களும் அவர்கள் விரும்பாத உணவுகளை நம்பியுள்ளனர், அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் கட்டுப்படுத்துகின்றனர். 10ல் 8 குடும்பங்கள் உணவு அடிப்படையிலான நிர்வாக உத்திகளான உணவு வேளை எண்ணிக்கையைக் குறைத்தல், கடன் வாங்குதல் அல்லது சேமிப்புகளைச் செலவழித்தல் போன்ற உத்திகளுக்குத் திரும்புவது தெரியவந்துள்ளது.

6.அரசு மருத்துவமனைகளுக்கு 20 மில்லியன் லிட்டர் டீசல் தேவையை பெற்றுக்கொள்ள திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜப்பானிய தூதுவர் ஹிடியாக்கி ஜப்பானிடம் இருந்து 46 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

7.தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஸ்ரீ மஹா போதிக்கு சேதம் விளைவிப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக வணக்கத்துக்குரிய அதமஸ்தானாதிப் தேரரின் விசேட கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

8.ஹோமாகம பிரதேசத்தில் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய சத்தியாக்கிரகத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

9.மன்னார் மற்றும் பூநகரியில் 250 மெகாவாட் மற்றும் 100 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அமைப்பதற்கு அதானி குழுமம் இலங்கை முதலீட்டு சபையிடம் இருந்து ஒப்புதல் பெறுகிறது – இதற்காக முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை USD.442 மில்லியன் மற்றும் இது சுமார் 1,500 – 2,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – இந்த ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 02 ஆண்டுகளுக்குள் தேசிய கட்டத்துடன் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10.பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற பிரதம நீதியரசர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தவிர்ந்த அனைத்து அரச அதிகாரிகளும் தமது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களின் போது economy வகுப்பு டிக்கெட்டுகளை மட்டுமே கொள்வனவு செய்ய வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ரத்நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கி வரும் நிதி நெருக்கடியை கருத்திற் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.