எரிபொருள் விலையேற்றம் குறித்த புதிய அறிவிப்பு

Date:

மக்களுக்கு எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (22) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்.

எரிபொருட்களின் விலையை அதிகரிக்காமல் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“எரிபொருள் விலைகளை அதிகரிக்காமல் தொடர்ந்து எரிபொருளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இன்று எங்களிடம் உள்ள எரிபொருளுக்கான பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து தொடர்பில் அனைவரும் கலந்துரையாடினோம். தற்போதைக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது.

அத்துடன், இ.போ.ச.வின் கடன்களுக்கு தேவையான நிதியை வழங்க நிதி அமைச்சின் செயலாளர் இணங்கினார். பின்னர் திங்கட்கிழமைக்குள் சுமார் 80 பில்லியன் ரூபா பெறப்படும் ”.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...