2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டணங்களை 13.56 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பாக, இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் இன்று பிப்ரவரி 25 ஆம் நாள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டங்களை தொடங்க உள்ளது.
ஒழுங்குமுறை ஆணையத்தின் படி, பிப்ரவரி 25 முதல் மார்ச் 18 வரை பொதுமக்கள் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். இந்த ஆலோசனை செயல்முறை ஒன்பது மாகாணங்களிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய மின்சார நிறுவனமான இலங்கை மின்சார சபை, இரண்டாம் காலாண்டிற்க்கான திருத்திய புதிய கட்டண முன்மொழிவை பிப்ரவரி 13 ஆம் நாள் இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
மின் கட்டணம் உயர்வு குறித்து, பொதுமக்களின் பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் பிற தொடர்புடைய பரிசீலனைகளைகள் மதிப்பாய்வு செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில், 15.8 பில்லியன் ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் எனவும், நடப்பு காலாண்டில் மொத்த செலவுகள் 136.5 பில்லியன் ரூபாய் என்றும் இலங்கை மின்சார சபை கணித்துள்ளது. அதே நேரத்தில் தற்போதைய கட்டண விகிதங்களில் வருவாய் 116.9 பில்லியன் ரூபாய்யாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின் கட்டணங்களை திருத்த இலங்கை மின்சார சபை மேற்கொண்ட முந்தைய முயற்சியைத் தொடர்ந்து இந்த முன்மொழியப்பட்ட அதிகரிப்பு உள்ளது. அதே நேரத்தில், காலாண்டு கட்டண திருத்த செய்முறையின் கீழ் 11.57 சதவீத அதிகரிப்பை பயன்பாடு கோரியிருந்தது. இருப்பினும், இந்த திட்டத்திற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
