அமெரிக்காவிலிருந்து அவசரமாக இலங்கை வரும் பஸில்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 5 மணிக்கு நாடு திரும்புகின்றார்.

அரசியல் ரீதியிலான வியூகங்களை வகுத்துகொண்டே பஸில் ராஜபக்ச கொழும்புவருகிறார் எனவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன தொடரணி மூலம் அவர் அழைத்துவரப்படுவார் எனவும் ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்கவை நாம் கொண்டுவந்திருந்தாலும் அவர் எமக்கு எதிராகவே செயற்படுகின்றார். மொட்டு கட்சியில் இருந்து ஒரு பிரிவை உருவாக்கியுள்ளார். இதனால் பஸில் ராஜபக்ச அதிருப்தியிலேயே அமெரிக்கா சென்றார்.

நாடாளுமன்றத் தேர்தலை இலக்குவைத்தே பஸில் வருகின்றார். பொதுத்தேர்தல்தான் முதலில் நடைபெறும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். ரணில் இதற்கு இணங்கிவிட்டார். தேர்தலை பஸில் ராஜபக்சதான் வழிபடுத்துவார்.
பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதும் வேட்பு மனு பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெறும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இன்னும் 10 வருடங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு கடினம்

வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறுகையில், நாட்டில் இன்னும்...