கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

Date:

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள் தொடர்பாக சில சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் பொய்யானவை என்றும், அதனுடன் தொடர்புடைய அனைத்து குற்றச்சாட்டுகளையும் வங்கி முற்றிலும் நிராகரிக்கிறது என்றும் சம்பத் வங்கி தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு வங்கி தெரிவித்ததாவது, அந்த கிளையின் ஒரு வாடிக்கையாளர் பெற்றிருந்த சுமார் 51 மில்லியன் ரூபாய் கடன் வசதி தொடர்பான புகாரை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்பதாகும்.

அந்த சம்பவம் தற்போது சட்ட நடவடிக்கைகளின் கீழ் விசாரணையில் இருப்பதுடன், வங்கியும் அதன் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சில சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களுக்கு மாறாக, சம்பத் வங்கி நிறுவனத்தின் எந்த அதிகாரியும் சிறையில் வைக்கப்படவில்லை என்றும் வங்கி வலியுறுத்தியுள்ளது.

இச்சம்பவம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் தவறாக வழிநடத்தும் கருத்துகளை நிராகரிப்பதைத் தவிர, அவை குறித்து இதற்கு மேல் கருத்து தெரிவிக்க இயலாது என்றும் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...