Sunday, April 28, 2024

Latest Posts

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு சரியான நேரத்தில் கிடைத்த ஆதரவு பாராட்டப்பட வேண்டும்!

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் ஆதரவு எப்போதும் பாராட்டப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கான தேசிய நாணயங்களின் பயன்பாடு, வலுவான இருதரப்பு பொருளாதார கூட்டு மற்றும் செழுமையை நோக்கிய கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல கடினமான தீர்மானங்களை எடுக்கும் அதேவேளையில், பொருளாதாரத்தில் காணக்கூடிய மாற்றத்திற்கு இலங்கை எவ்வாறு வந்துள்ளது என்பதை இதன்போது இராஜாங்க அமைச்சர் சுருக்கமாக விளக்கினார்.

சில தீர்மானங்களால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அது நிச்சயமாக அவர்களை வலுவான பொருளாதார மீட்சியை விரைவில் அடையச் செய்யும்.

மேலும், இராஜாங்க அமைச்சர், தனது நீண்டகால நண்பராக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தேவையான நிதி உத்தரவாதத்தை வழங்குவதில் இந்தியாவின் தலையீடு எப்போதும் பாராட்டத்தக்கது.

வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு கலந்துரையாடல்களினால் இலங்கை எவ்வாறு பயனடைந்தது மற்றும் அவர்கள் எவ்வாறு இலங்கைக்கு மேலும் ஆதரவளிப்பார்கள் என்பதை இராஜாங்க அமைச்சர் விளக்கினார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.