ரணில் – பசில் இன்று மீண்டும் சந்திப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 4 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், இது தீர்மானமிக்க சந்திப்பொன்றாகக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் முன்னதாக பல சந்திப்புகள் இடம்பெற்றிருந்த போதும் அவை இணக்கப்பாட்டின்றி நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...