தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடியிருந்தது. எனினும், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, திகதி நிர்ணயம் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
N.S