குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

Date:

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்ற கும்பல்கள் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

52 குற்ற கும்பல்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனினும் இந்த கும்பல்கள் ஒவ்வொன்றும் ஒன்றாக செயல்பட்டு பின்னர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பிரிந்து செயற்படுவதாக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். 

சில கும்பல்கள் அவர்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 100 பொலிஸ் அதிகாரிகளை கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு தவறான நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்களை பெற்ற பின்னர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...