Breaking News: பாணந்துறை கடற் பகுதியில் போர் கப்பல்?

0
43

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை கடற்கரை அருகிலுள்ள கடற்பரப்பில் தற்போது சந்தேகத்துக்கிடமான ஒரு போர்க்கப்பல் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியிருந்தாலும், அதற்கு இதுவரை நாட்டின் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்த கப்பலுக்கு ஏதேனும் தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற சந்தேகமும் நிலவுகிறது என தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலைமை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here