கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் தொனி விவாதம் – வீடியோ

0
193

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் சால்ஸ் நிர்மலாநாதன் ஆகியோ இவ்வாறு கேள்விகளை எழுப்பினார்.

பிரதேச செயலகம் ஒன்று கணக்காளர் இல்லாமல் இருக்க முடியுமா எனவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலமாக அழைக்கக்கூடாது எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் உடனடியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here