ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடன் தேர்தலை நடத்துங்கள்!

Date:

“ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அரசிடம் கோருகின்றோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது:-

“இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசு தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்கக் கடுமையாக முயற்சித்து வருகின்றது.

தேர்தலை நடத்தாமல் தடுக்க இதுவரை சுமார் 22 விதமான கூட்டுச் சதிகளை அரசு கையாண்டுள்ளது.

அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில்,தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்காமல் இருப்பதுதான் அரசின் கடைசி முயற்சியாகத் தெரிகின்றது. இது ஜனநாயகத்தை நசுக்கும் விடயமாகவும் அமைந்துள்ளது” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...