ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடன் தேர்தலை நடத்துங்கள்!

Date:

“ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அரசிடம் கோருகின்றோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது:-

“இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசு தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்கக் கடுமையாக முயற்சித்து வருகின்றது.

தேர்தலை நடத்தாமல் தடுக்க இதுவரை சுமார் 22 விதமான கூட்டுச் சதிகளை அரசு கையாண்டுள்ளது.

அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில்,தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்காமல் இருப்பதுதான் அரசின் கடைசி முயற்சியாகத் தெரிகின்றது. இது ஜனநாயகத்தை நசுக்கும் விடயமாகவும் அமைந்துள்ளது” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...