ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடன் தேர்தலை நடத்துங்கள்!

Date:

“ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அரசிடம் கோருகின்றோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது:-

“இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசு தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்கக் கடுமையாக முயற்சித்து வருகின்றது.

தேர்தலை நடத்தாமல் தடுக்க இதுவரை சுமார் 22 விதமான கூட்டுச் சதிகளை அரசு கையாண்டுள்ளது.

அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில்,தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்காமல் இருப்பதுதான் அரசின் கடைசி முயற்சியாகத் தெரிகின்றது. இது ஜனநாயகத்தை நசுக்கும் விடயமாகவும் அமைந்துள்ளது” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...