மீண்டும் பசில் ராஜபக்ஷவை வம்புக்கு இழுக்கிறார் விமல்!

Date:

தமது அர்ப்பணிப்புடன் உருவாக்கிய மக்கள் ஆணையை பசில் ராஜபக்ச தனது பாக்கெட்டில் ஏற்றிக்கொண்டதாகவும், இன்று நாட்டை ஆள்வது கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ அல்ல என்றும் பசில் ராஜபக்ஷவினால் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

“இது நாங்கள் முன்னின்று மக்களுக்கு பல உறுதியளித்து பெற்ற ஆணையாகும். அந்த ஆணையின் உரிமைகளில் இருந்து நாம் விலகி இருக்க முடியாது.

அதிலும் குறிப்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இந்த நாட்டின் பொருளாதாரம் எதிர் திசையில் இழுக்கப்படுமானால் அதனை சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி தோற்கடிக்க உறுதிபூண்டுள்ளோம். அதற்குக் காரணம் இன்று இந்த நாட்டை ஆட்சி செய்வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்ல. பசில்தால் ஆள்கிறார். உண்மையில், அவர் ஒரு அமெரிக்கர். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழிக்கிறார். இந்த நாட்டை ஒரு அமெரிக்கன் கையாள்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.’

இவ்வாறு தனது பிறந்த நாளை முன்னிட்டு அனுராதபுரத்தில் நேற்று (07) இடம்பெற்ற விசேட சமய நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது விமல் வீரவங்ச தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...