நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுப்பு!

Date:

இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், துறைமுக ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

நேற்று 8ஆம் திகதிக்குள் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து சேவைகளும் முடங்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் குறித்த தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன.

தொழிற்சங்களினால் வழங்கப்பட்ட ஒருவார கால அவகாசம் நிலையில் இன்றிலிருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதிவரை இந்த போராட்டங்கள் தொடருமென தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...