இன்று ஐதேகவின் ‘உண்மை’ குளியாபிட்டியில்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது மக்கள் பேரணி இன்று (10) பிற்பகல் 02.00 மணிக்கு குளியாபிட்டிய மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஏற்பாடு செய்துள்ள இந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரத்தின் ஆரம்பமாகும்.

இது “உண்மை” என்று அழைக்கப்படுகிறது.

“குறிப்பாக இந்த நாடு திவாலானபோது, இந்த நாடு அராஜகமானபோது, இந்த நாடு தனது தலைமைத்துவத்தை இழந்தபோது, தற்போதைய ஜனாதிபதி இந்த சவாலை ஏற்றுக்கொண்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்டு படிப்படியாக முன்னோக்கிச் சென்று, இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, இந்நாட்டு மக்களுக்கான நாளைய நாளை உருவாக்க உழைத்து, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம். எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இன்று முதல் தடவையாக குளியாப்பிட்டியவில் இருந்து இந்தப் போரை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளார்” என இது தொடர்பில் கருத்து கூறிய அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, பாலித ரங்கே பண்டார, சாகல ரத்நாயக்க, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்று முதல் பஸ்களைச் சேவையில்

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின்...

அரச அலுவலகங்கள் இன்று திறப்பு

அரச அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள்...

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...