இன்று ஐதேகவின் ‘உண்மை’ குளியாபிட்டியில்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது மக்கள் பேரணி இன்று (10) பிற்பகல் 02.00 மணிக்கு குளியாபிட்டிய மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஏற்பாடு செய்துள்ள இந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரத்தின் ஆரம்பமாகும்.

இது “உண்மை” என்று அழைக்கப்படுகிறது.

“குறிப்பாக இந்த நாடு திவாலானபோது, இந்த நாடு அராஜகமானபோது, இந்த நாடு தனது தலைமைத்துவத்தை இழந்தபோது, தற்போதைய ஜனாதிபதி இந்த சவாலை ஏற்றுக்கொண்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்டு படிப்படியாக முன்னோக்கிச் சென்று, இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, இந்நாட்டு மக்களுக்கான நாளைய நாளை உருவாக்க உழைத்து, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம். எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இன்று முதல் தடவையாக குளியாப்பிட்டியவில் இருந்து இந்தப் போரை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளார்” என இது தொடர்பில் கருத்து கூறிய அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, பாலித ரங்கே பண்டார, சாகல ரத்நாயக்க, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...