Sunday, May 19, 2024

Latest Posts

க.பொ.த சாதாரண தர பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?அமைச்சரின் தகவல்!

2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

A/L பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுமோ அது O/L பரீட்சையை நடத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும். O/L பரீட்சை மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் A/L பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எடுக்கும் நாட்களின் எண்ணிக்கை காரணமாக தாமதமாகும்.

பரீட்சை திணைக்களத்திற்கு இரண்டு பரீட்சைகளுக்கு இடையில் குறைந்தது மூன்று மாத இடைவெளி தேவை. எனவே, திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்த முடியுமா என்பதை அமைச்சு எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.