டொலரின் விலை அதிகரிப்பால் அரிசின் விலையும் அதிகரிப்பு !

Date:

அரசாங்கம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தாவிட்டால் அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவை தாண்டும் என சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரிய நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்படி, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் உடனடியாக விதிக்க வேண்டுமென தொழிற்சங்கம் கோருகின்றது.

இதேவேளை, அரிசியை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொலிசாக் பை ஒன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதுடன், அதற்கேற்ப அரிசியின் விலையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...