டொலரின் விலை அதிகரிப்பால் அரிசின் விலையும் அதிகரிப்பு !

Date:

அரசாங்கம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தாவிட்டால் அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவை தாண்டும் என சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரிய நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்படி, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் உடனடியாக விதிக்க வேண்டுமென தொழிற்சங்கம் கோருகின்றது.

இதேவேளை, அரிசியை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொலிசாக் பை ஒன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதுடன், அதற்கேற்ப அரிசியின் விலையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...