தற்போது நிலவி வரும் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சிக்கலை கருத்தில் கொண்டு அதனை சமாளிக்கும் வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு வரும் புதன்கிழமை (18) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
