வீட்டு மாடியில் கஞ்சா வளர்த்தவர் கைது

Date:

அம்பாறை – சம்மாந்துறை மலையடி கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடி பெல்கனியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் வீட்டின் மூன்றாவது மாடியின் மேல் பூச்செடிகளுடன் பூச்சாடிகள் வளர்ப்பது போல கஞ்சா செடிகளை வளர்த்துவந்துள்ள இரண்டு கஞ்சா செடிகளை மீட்டதுடன் 33 வயதுடைய வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...