தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அங்குரார்ப்பணம்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

மனிதாபிமான மக்கள் கூட்டணி எனும் பெயரில் இந்தப் புதியக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச மத்திய நிலையத்தில் உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

சுமார் நாற்பது சிவில் அமைப்புகள் இந்தப் புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக புதிய கூட்டணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் புதிய கூட்டணியுடனான ஒப்பந்தங்களும் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவராக தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...