தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அங்குரார்ப்பணம்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

மனிதாபிமான மக்கள் கூட்டணி எனும் பெயரில் இந்தப் புதியக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச மத்திய நிலையத்தில் உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

சுமார் நாற்பது சிவில் அமைப்புகள் இந்தப் புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக புதிய கூட்டணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் புதிய கூட்டணியுடனான ஒப்பந்தங்களும் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவராக தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...