தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அங்குரார்ப்பணம்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

மனிதாபிமான மக்கள் கூட்டணி எனும் பெயரில் இந்தப் புதியக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச மத்திய நிலையத்தில் உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

சுமார் நாற்பது சிவில் அமைப்புகள் இந்தப் புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக புதிய கூட்டணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் புதிய கூட்டணியுடனான ஒப்பந்தங்களும் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவராக தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...